கோமல் சிந்தனைத் துளிகள்
- வாழ்தல், வாழ்வித்தல் வல்லமை!
- நீ நினைத்ததை அடைய ஆசைப்பட்டால் முதலில் அவமானப்பட ஆசைப்படு! ஏனெனில் அதுதான் அத்தனை சாதனைகளுக்கும் அடித்தளம்!
- வாசிப்பை நேசிப்பவர்களுக்கே உலகம் வசப்படும்….
வாசிப்போம் – புத்தகங்களைச் சுவாசிப்போம்…!.
- அனுபவ சுருக்கங்களில்
ஆயிரமாயிரம் பாடங்கள் ….
அனைத்தையும் கற்போம்…..
அன்பு கொட்டி முதியோரை ஆராதிப்போம்…..
- பிடித்தவர்களை மட்டும் நேசிப்பதற்குப் பெயர் அன்பு அல்ல; எல்லோரையும் நேசிப்பது தான் உண்மையான அன்பு….!
- பேருலகத்தை இயக்கும்
பெண்மையைப் போற்றுவோம்….
- என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதில் அல்ல; கற்ற வற்றில் எவ்வளவு செயல் படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றி !
- புதிதாக எதாவது சாதிப்பதற்கு உங்களைப் புதுப்பித்துக் கொள்ள நினைத்தால் புத்தகங்களை வாசிப்பதே தலை சிறந்த வழி!
- ஒவ்வொன்றாய் விதைத்து…. ஒவ்வொன்றிலும் இயக்கி…. உள்ளுக்குள் இருந்து வழி நடத்தும் ஒவ்வோர் ஆசானையும் ஒவ்வொரு நாளும் வணங்குவோம்!
- வாழ்வையே தவமாக்கி உலகம்
வாழ்வதற்கு வரம் அருளும் பெண் குலம் வணக்கத்திற் குரியது எப்போதும்!
- அனுபவக் களஞ்சியமாக நம்மோடு வாழும்
அத்தனை பெரியவர்களையும் மதிப்போம் !
அப்படிப் பட்டவர்களைக் கொண்டாடுவதைநம்
அப்பா – அம்மாவிடம் இருந்து தொடங்குவோம்!
- பள்ளி கல்லூரி… வாழ்க்கை… ஒவ்வொன்றிலும் எவ்வளவோ கற்றுக் கொடுத்தவர்களின் நினைவுகள் எப்போதும் ஆழ்மனதில்… காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறோம் அந்த நல்ல உள்ளங்களுக்கு…!
- ஒரே ஓர் அடி கூட அடிக்காமல் குழந்தையை உன்னதமாக வளர்க்க முடிந்தவர்களே நல்ல பெற்றோர்!
- உன் பெற்றோரைக் கொண்டாடாமல் உலகில் எந்தக் கடவுளை வணங்கினாலும் ஒரு புண்ணியமும் இல்லை
- நம்மை மேம்படுத்திக் கொள்வோம்! நம்மைச் சுற்றியிருப்பவர்களை மேம்படுத்துவோம்! நமது ஊரை மேம்படுத்துவோம்! நம் நாடு தானாக மேம்படும்!